Monday, June 25, 2012

உயிர்ப்பின் மீள்சிறகுகள்

வானவில்லின் வனத்திலிருந்து
சிறு சிறு வண்ணத்துளிகளைப் பறித்து

சிற்பம் தொடுத்துக் கொண்டிந்தவளிடம்
மீள்வருகை சாத்தியமா என்றேன்...
நட்சத்திரங்கள் சிரித்திருக்கும்
வண்ணக்கசிவின் உருவமற்ற சிற்பங்களில்
கனா தழும்பும் முத்தங்களால்
உயிர்க்காற்றை உட்புகுத்தத் துவங்கி இருந்தாள்
யாழினி..


- தேனு
நன்றி உயிரோசை

No comments:

Post a Comment