Sunday, June 17, 2012

இறுகப்பற்றிக் கொள்ளும் ஓர் இருப்பின் சிறை


**
மௌனவண்ணம் பூசப்பட்ட கண்ணாடிக் குடுவையில்
என்னை அடக்கி வைத்திருக்கும் சுயமற்றவள்
அடர்வனம் நோக்கி
நாட்கள் வழியாக பயணிக்கிறாள்..
  
சுற்றி நெளியும் காற்று முழுதும்
உதிரச் சிவப்பின் சுவாசமாக
மாறிக் கொண்டிருப்பதை கண்டு
நாட்காட்டியின் வேகத்தைக் கூட்டுகிறாள்..
  
மெலிதான ஓர் இறுக்கத்தின் வெம்மையை
உணர்ந்ததும் சட்டென்று குடுவையை
நீளும் பாதையிலேயே விட்டு
முன்பின் உணர்வின்றி ஓடியவளைக்
கண்டேன் என நகர்கிறது இருள்..
   
விடுதலைக் கனாக்களென்னும்
நிறமற்ற நீர்க்குமிழ்களால் நிறைந்து வழிகிறது
கண்ணாடிக் குடுவை..
*

 - தேனு

நன்றி உயிறோசை,


No comments:

Post a Comment