Monday, June 25, 2012

பட்டாம்பூச்சி சிறகுகள் நிறைந்த வனம்


**
உயிர் சிறகுகள் விரித்திருக்கும்
பட்டாம்பூச்சிகளை சேகரித்த
வெளிர்வண்ண குடுவையுடன்
தனிமையின் வனத்தில்
பயணிக்கிறாள் விழிகளற்றவள்..
கடக்கும் இலையற்ற மரம் ஒன்றிற்கு
ஒவ்வொரு பட்டாம்பூச்சியென
வெளியெடுத்து சின்னாபின்னமாக்கி
வனமெங்கும் பிய்த்தெறிகிறாள்..
*
வண்ணங்கள் தூவி தாழப் பறக்கும் பூவொன்று
அடர்வனத்தினூடே பயணிக்க
பிய்த்தெறியப்பட்ட ஒவ்வொரு அங்கமும்
புதுவண்ண பட்டாம்பூச்சியாக
சிறகுகள் விரிக்கின்றன...
வான்முழுதும் பட்டாம்பூச்சியாய் நிறைந்தபிறகு
இலையற்ற மரங்களில் தாவி தாவி
வனத்தைக் கடக்க துவங்குகிறார்கள்
கைகோர்த்தபடி பூவும் அவளும்...
**
 தேனு
நன்றி கீற்று,

No comments:

Post a Comment