Monday, June 25, 2012

சுழல்களாலான ஒரு இரவுக்குவியல்

கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் உடலைத்
தழுவத்தகுந்த விஷப்பறவையொன்றை
இரவிற்காக மட்டும் வளர்த்து வருகிறேன்..
தூக்கம் களைந்தெழும் எந்தவொரு இரவிலும்
முன்னிரவில் நடந்தேறியவைகளை
நகங்களில் படிந்திருக்கும் கறையைக்
கொண்டு யூகிக்கிறது பறவை..
நிதம் ஒலிக்கும் கூக்குரலை
ரசிக்கவரும் வேடர்கள் 
அமுதம் கொண்டு என்னையும் பறவையையும் 
கொலை செய்ய முயல்கின்றனர்..
விஷத்தின் உருவம்கொண்டு
சுழல்வியூகம் படர்த்தி அமுதப்படுக்கையில்
மலர்ந்துவிடுதல் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்..
தொடர்ந்து வந்த நாட்களில் என்னறைமுழுதும்
மரித்துப்போய் நிரம்பியிருக்கின்றன
அபிமன்யுக்களின் நிழல் பிம்பங்கள் மட்டும்..
 - தேனு

நன்றி உயிரோசை,

No comments:

Post a Comment