Sunday, June 17, 2012

செரித்துப் போகும் சொற்களின் பயணம்




சொற்களை மட்டும்
செரித்துக் கொண்டிருக்கிறது மனம்..

நுகர்வுக்குழாய் வழி
பயணித்த நெருப்புச்சொற்கள்
மெதுவானதொரு உணர்வுப் பிழம்புகளை
வன்மைச் சாயம்பூசி உள்ளிறக்குகின்றன..

மனதின் இயல்பிற்கு எதிராய்
இயங்க துவங்கியிருந்த சொற்கள்
மெல்ல என் இதயத்தின் துவாரங்களைத்
துழாவித் துழாவிக் கண்டு கொள்கின்றன,
இதயச் சுவர்களின் மென்மையை உடைத்தபடி..

தனிமை அமிலத்துளிகளை
மெய்மறக்க உருவாக்கிச் சில சொற்களை மட்டும்
செரித்துக் கொண்டிருக்கிறது என் மனம்..
 
- தேனு

நன்றி உயிரோசை 

No comments:

Post a Comment