Monday, February 28, 2011

விதியெனும் கடிகைக்கருவி


பிறகென்றும் வாய்த்திடா நாளொன்றில்
நிறுத்தப்பட்டிருந்தன
கைக்கடிகை முட்கள்..
.
கடிகை வட்டங்களைப்
பெயர்த்தெடுத்து
அவ்வட்டங்களில் சதுக்கங்களை
இழைத்து வைத்து தேடுகிறேன்..
எனது சிற்சில மூலக்கூறுகள்
அடைத்திட யத்தனப்பட்டு..
.
வட்டங்களில் சதுக்கங்கள்
ஒவ்வொரு விதத்தில் கோண
அடைத்திட வகையின்றி
கலைத்து மீண்டும்
இழைக்கிறேன் முதலிலிருந்து..
.
விளிம்புகளை சற்று பின்னிறக்கி
பக்கவாட்டில் என்னைப் பார்த்து
கொக்கரிக்கின்றன
முட்கள் ஒன்றோடொன்று
பிணைந்திட்டு..

 - தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311022710&format=html

Tuesday, February 22, 2011

என்று தணியும்?


பாலின வேற்றுமைகள்
இறைவனது அரங்கேற்றம்...
வேற்றுமைக்கான வாழ்வியல் நியதிகள்???
ஓர் வர்க்கம் அதீதம்
இயற்றியிருக்கக் கூடும்..
.
எந்நேரமும் எவ்விடமும்
பாதுகாப்புக்கான கோபக்கோர்வைகள்
மென்மை மறைபட...
.
பற்றியெரியும் உடல் வேட்டங்கள்...
வகையென பேருந்து உரசல்கள்..
அறிமுகமற்ற எண்கள்..
நீண்டு மிரட்டும் அழைப்புகள்..
.
கிட்டும் வேளைகள்..
உடைகள் ஊடுருவப்படும்
உதிர்பூக்களின் தேகங்கள்..
பிய்த்து பிடுங்கும்
கொன்றுண்ணி கழுகுப்பார்வைகள்...
.
சுதந்திர மண்தான்..
கேலிக்காட்படுத்தப்படக் கூடிய
சுதந்திர மண்தான்..
.
என்று தணியும்
இத்தரமற்றுத் திரியும்
மாயக்கருமங்கள்??

 - தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31102209&format=html

Wednesday, February 16, 2011

உருள்படும் பகடைக்காய்கள்



சன்னல் தென்படுகிறதா?
இருள்படிந்த அகம்
எண்ண அலைகளால்
ஊடுருவப்பட்டு
ஏதோ ஓர் புள்ளிக்கு அப்பால்
ஒதுக்கப்பட்டிருந்தது..

சிதறுண்ட கண்ணாடி
துண்டங்களின் சேர்க்கை
குறுக்கு மறுக்குமான பிரதிபிம்பம்
எது அசல் நான்?
எது நகல் நான்?
புரிபடா தெளிவுகள் வழி
ஓடிக் கொண்டிருந்த கலக்கங்கள்..

இலட்சிய பாதைகள்,
அவைகள் எட்டுத்திக்கிலும்
அதில் எது எனது(கள்) என்ற
தேடலின் தொடர்ச்சி...

வார்க்கப்பட்டு வளர்க்கப்படும் எனது(கள்)
மெய்யாகவே எனது(கள்)தானா?
அவசியங்கள் அனாவசியமாய்
தவிர்க்கப்பட்ட
ஆசன ஏற்றம் உசிதமன்று...
கூரியம் மழுங்க
புரட்டப் படுகின்றன
வாழ்க்கைச் சக்கரங்கள்!!!


நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31102138&format=html

Monday, February 14, 2011

காதல் பிணைப்பினிலே



நீர்ம திரையின் மறுபக்கம்
வெட்கம் மீதான சேர்க்கையுடன்
ஏறத்தாழ அவளது முழுமுகமும்..


வழிந்தோடும் விருப்புகள் வழி
இழையோடி நின்று
அவ்விமைகளிடும் தாளங்கள்..
என்னவென்று யூகிக்க
நேரமிட்டு வைப்பதன்றி
விரல்கள் ஒவ்வொன்றாய்
விடுபட..


இடறி சிதறுண்ட
விண்மீன்கள் சில
சட்டென அவள் முகத்தில்
ஒருசேர குடிகொண்டன
நாணத்துடன்..


என்னையும் மீறி
ஏதோ ஓர் புள்ளிக்குள்
காதலித்து நான் கிடக்க
முகமூடியைக் களைத்தெறிந்து
படர்ந்து கொண்டாள்..
சற்று மயக்க நிலையில்
இறுக பிணையப்பட்டு நான்..


சாரலென உள்ளூர சிலிர்க்க விட்டு
நகைத்தபடி நின்றிருந்தன,
அவளுக்கென்று நான்
மீதமாக்கி வைத்திருந்த
ரசனைகள்...


நன்றி காட்சி
http://kaattchi.blogspot.com/2011/02/blog-post_14.html#more

நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12966%3A2011-02-13-11-32-15&catid=2%3Apoems&Itemid=265

"கீற்று" தளத்தில் தலைப்பு - அம்மாலைப் பொழுதினிலே.. I thought that it got rejected in Keetru, so sent it to Kaatchi.. but got published in both the sites..

Friday, February 11, 2011

என்னவள் அழைத்திருந்தாள்...



நள்ளிரவில் சிணுங்கியது
தலையணையின் கீழ் கைபேசி!!

என்னவள்தான் அழைப்பில்...
ஒரு வார்த்தை உதிர
கனிரசம் வழிய
'காதலிக்கிறேன்'
எவ்விடமும்
ஒவ்வொரு முறையும்!

'ஒரு கவிதை சொல்லேன்'
ஓர் செல்ல சிணுங்கல்
'நீ' என்கிறேன்!!!
'ச்சீ' மீண்டும் சிணுங்கல்!
இரவின் இருளோடு
நீண்ட உரை
கைபேசிகளுக்கே வெளிச்சம்!!!

முடித்த மறுநிமிடமே
அவளோடு கூடி
என்னை ஒதுக்கியிருந்தான்
நித்திரை சண்டாளன்!!!

கோபத்துடன்
தவிர்க்கப்பட்ட தலையணையும்!!
மீதமிருந்த உறக்கங்களும்!!

நன்றி கூடல்

http://www.koodal.com/poem/tamil/kavithai.asp?id=1467&c=1&title=valentine-s-day-special-my-dear-s-call&author=thenappan

Monday, February 7, 2011

இரவுக்காதல்



மெய்யோடு இழைந்துருளும்
அவ்விருளுக்கான நிசப்தத்துடன்
நடந்தேறும் காதல் களியாட்டம்...
.
கருங்கம்பளம் பரப்பி
வெண்ணிற மலர்கள் இருப்பில் கிடத்தி
முன்னிரவிற்கான தூது அனுப்பப்பட்டது
நிலவுக்காதலனுக்கு...

ஊடல் தேய்ந்து கூடலும்
கூடல் தேய்ந்து ஊடலும்
மாற்றங்கள் நிதர்சனம்...
.
கம்பளத்துக்குள் விழுங்கப்பட்டு
மாதம் இரு நாள்..
காதலனும் காதலியும்
எப்படி கூடுவர்?
இரகசியம் வெளிப்பட
பற்பல கவிதைகள் வழி
இன்றும் விடை தேடி நான்..

ஊடல்கள் ஊருக்கே
பிறைகளாக வெளிச்சப்பட்டு
முகம் திருப்பும் காதலனின்
பொய்க்கோபம் தீர
என்னென்ன தூதனுப்புகிறாள் காதலி?
ஆயுள் குறைந்த இவ்வூடலும்
கூடிப் பிணைந்திடும் இறுக்கம்தான் இங்கே..

எத்தனை காலம் கழியினும்
எத்தனை காதல் வருமினும்
இளமை மிளிரும் இரவுப்பெண்ணிற்கான
காதல் வனப்புகள்
என்றும் அழகுதான்...

நன்றி திண்ணை

Thursday, February 3, 2011

ஒரு கவிதை உருவாகிறாள்



எண்ணச் சிதறல்
தலைவிரி கோலத்தோடு
நிர்வாண வார்த்தைகள்
.
தொடுக்கப்பட்டு
வெட்கத்தால் இழுபடுகிறது
கோர்வை!!!

சிக்கல் கலைத்து
பின்னி எடுக்கையில்
அரங்கேற்றத்திற்கு ஆயத்தம்
எந்தன் கவிதை காதலி....
.
அதர ரேகைகள் தெறித்து
ஒரு வசீகரப் புன்னகை
விடுபட
நிசப்தத்துடன் விடுதலை....
இருட்டறையில் அடைபட்டிருந்த
கற்பனை கருக்கள்!!



நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311013013&format=html

Tuesday, February 1, 2011

மழை ரசித்த நாணம்


மாலை மங்கி
இருள் சூழத் தொடங்கியிருந்தது!!
.
சாலையோர மலர்களை
ரசித்த வண்ணம்
பேச்சைத் தொடர்ந்தாள்!
எதையெதையோ பற்றி
தொடர்ச்சியே இன்றி!

மழைக்கு அதீத காதல்
நிலமடந்தை மீதா?
எங்கள் மீதா?
.
பொழியத் தொடங்கினான்
மூச்சு விடவும் தாமதிக்காமல்...

துழாவல் என்னோடு அவளும்
முழுதாய் நனைந்தும்
ஒதுங்க இடமொன்று
தஞ்சமோ ஓர் மரத்தின் கீழ்!

அவள் மூச்சுக்காற்று
ஊடலாய்
என் காது மடலோடு..
.
ஆயிரம் ஆயிரம்
மின்னல் கீற்றுகள்,
என் மனதோடு...

சற்று தைரியமாய்
சேர்த்து அணைத்தேன்
உயிரோடு மெய்யையும்
இதழோடு இதழையும்!!
.
சட்டென்று உணர்ந்தவளாய்
விலக்கி விட்டோடினாள்.
சிறிதளவும்
வெட்கம் விலகாமல்!!!


நன்றி நிலாச்சாரல்
http://www.nilacharal.com/ocms/log/01311107.asp