Sunday, June 17, 2012

உயிர்க்கும் நான்குச்சுவர் உலகம்


**
காற்றில் ஊடுருவும் காலங்களை
நேற்று இன்று என மொழிப்பெயர்த்து
நகரும் இரவிடம்
முணுமுணுப்பாய் சில உயிர்ப்புகளைக்
கதைத்துக் கொண்டிருக்கிறாள் யாழினி..

*
வண்ணத்துப்பூச்சி சிறகின் அறையொன்றில்
மழையாதலின் சாத்தியங்களை
பொம்மைகளுக்குப் பூசிக் கொண்டிருக்கிறாள்,
நாளை பூக்கும் நட்சத்திரங்களுக்காய்
அவள் மட்டும்..
**

- தேனு

No comments:

Post a Comment