Sunday, June 17, 2012

சுயம் மறக்கும் மையத்தின் அடர் வியூகம்..



 
தனித்திருந்த பொய்யின் மையப்புள்ளியை
ஒரு சிதறலின் பூவிதழ் வனத்திலிருந்து
தொடங்குகிறேன்..
 
மையத்தின் கால்கள் மரத்து
மிரட்சி மிகும் சமயங்களில்
முடிவுறா பயணத்திற்கு
பாளப்படிம அடையாளங்களென
இடப்படுகின்றன காற்புள்ளிகள்..
 
தற்காலிக கார்புள்ளிகளால் இணைக்கப்பெற்ற
தோல்வியின் அடர்சாலையில்
இருபுறமும் மர்மப்புன்னகை துளைகளை
மெய்வண்ணப்பசை கொண்டு
நட்டு வைக்கிறேன்..
 
ஒன்றன் பின் ஒன்றாக ஓய்வற்று நீண்டுகொண்டிருக்கும்
மௌனத் துளைகளின் சக்கர வியூகத்தில்
மெல்ல தொலைந்திருக்கிறது வனம்..

- தேனு 

நன்றி உயிரோசை 

No comments:

Post a Comment