Sunday, June 17, 2012

மரணத்துளிகள் சிந்தும் புறக்கணிப்பின் மௌன இரவு...

புறக்கணிக்கப்பட்ட வெள்ளை கொடிக்கயிறின் மேனியெங்கும்
உலர்ந்திருந்த சிகப்புச் சாயம்
ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகுதிர்ப்பை
வரைந்து வைத்திருக்கிறது...

யாருமற்ற மௌன இரவில்
கயிறின் இறுக்கம் மெலிதாய் வீரியப்பட
உயிரின் சிறகுகள் கொண்ட
ஒரு நரம்பு உதிரத்தில் நனைந்து
சிறகடிப்பதை காண்பதற்கில்லை..

தனித்திருந்த விலா எழும்பின் சலனத்துளி
இறுகப்படும் உயிரின் மையத்தில்
வெறும் காகிதங்களையும்
வார்த்தைகளையும் நிரப்பி
உதிரும் நரம்புகளின் உரையாடல்களுள் நுழைகிறது..

மௌனத்தின் புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு இரவிலும்
மெலிதான ஓர் மரணவார்த்தை
அரவமின்றி வாசிக்கப்படுகின்றது....


- தேனு


நன்றி உயிரோசை

No comments:

Post a Comment