Sunday, June 17, 2012

விளிம்புகள் தீட்டும் நவீனத்தின் காகிதங்கள்


காலங்கள் வழியே பயணிக்கும் மழையை
கண்டபடி சிரித்திருக்கிறான் ஆணொருவன்..
ஒவ்வொரு நாளும்
பருவத்தின் நாட்களை கண்டுவர
வெகு இயல்பாய்
மழையில் பயணிக்கிறான்...
சிறகுகளால் கதைக்கும் வனக்குருவி ஒன்றை
தோளில் சுமந்தபடி
இழந்துபோன குழந்தைத் தன்மைகளை
வண்ணத்துப்பூச்சிக் கணக்காய் ரசிக்கத் துவங்குகிறான்..
பருவம் ஒவ்வொன்றையும்
குறிப்பெடுத்து திருத்தி
தனது நேற்றான தன்னுடனே நண்பனாக
மீண்டும் வாழத் துவங்குகிறான்...
பின்னொரு நாளில்,
நிகழுலகில் தன்னுடல் மரித்ததை
மழை கதைத்தவுடன் அடர்வண்ணமாய்
நுழைகிறான்,
நவீன ஓவியமொன்றிற்குள் ..

- தேனு

நன்றி உயிரோசை,

No comments:

Post a Comment