Monday, June 25, 2012

துளிர் நிமிடங்களின் இலை


திரையிட்டு மூடிய சாளரக்கம்பிகளைத்
தழுவிச் செல்கிறது
காற்றோடு பாயும் மௌனம்..
சாளரத்து மலர்க்கொடியின் கைகளில்
சிக்கிக்கொண்டு தவிக்கும்
ஒற்றை இலைச்சருகை 
இலகுவாய் காப்பாற்றத்
தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றன 
தொலைகாட்சி மின்கம்பிகள்...

- தேனு

நன்றி உயிரோசை,

No comments:

Post a Comment