Sunday, June 17, 2012

அப்பியிருக்கும் இருளின் நிறம்



உணர்வுகளின் வண்ணங்களை
ஓவியமாக்க முற்படும் பொழுதுகளில்
தாழ்வென்னும் நிறத்தைப் பெறுகிறாள்
நிறங்களுடன் பேசுபவள்...
தாழ்வின் நிறம் பற்றிய
புதிரொன்றின் விளிம்பில் சிக்கியவள்
நிறமற்ற கடலிடம் பதில் கேட்டு நிற்கிறாள்..
அவளை நனைத்துக் கொண்டிருந்த
ஒளிர்கடல்
தாழ்வு நிறங்களடர்ந்த கதைகள்
ஒவ்வொன்றாய் சொல்லத் துவங்குகிறது..
விழியும் செவியும் தழும்ப
கதைகள் சொல்லிக்கொண்டிருந்த கடல்
அவளை விழுங்கும்
புறக்கணிப்பின் ஒரு பெருங்கதையை
சொல்லி பின்னோக்கி நகர,
நுரை துப்பிய கரையில் மௌனித்திருக்கின்றன
வழிமறந்த பாதச்சுவடுகள் இரண்டு..

- தேனு 

நன்றி உயிரோசை 

No comments:

Post a Comment