Monday, December 5, 2011

ஒரு பிஞ்சு கைப்பிடி இரவின் வண்ணச் சாயம்



அடர்தூறலுடன் நின்றுபோன
மழை இரவின் பிம்பம்
இருள் தூரிகையினால்
வெளிர்நிறங்கொண்டு தீட்டப்படுகிறது
என்கிறாள் தேவதை யாழினி..
.
இரவிற்கும் மழைக்குமான
ஒரு குறுகிய கைக்குலுக்கல் மூலம்
அபகரிக்கப்படும் நிலவுகள்
அவள் உறக்கங்கள் பற்றிய குறிப்பொன்றை
தங்களகத்தே மறைக்கின்றன..
.
அது பொய்யாகவோ மெய்யாகவோ
கட்டவிழ்க்கப்படும் வேளை
அவை லயிக்கும் கனவுகளில்
நிரந்தரமாய்
இளமஞ்சள் நிறத்தைக் கக்கி நிற்கிறது
படுக்கையறை மின்நிலவு..

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5013