வாலறுந்த வார்த்தைகள் உயர
பறந்து கொண்டிருக்கின்றன..
காற்றோடு உறவாடும்
ஒற்றைவழிப் பாதையின் வழிபோக்கப்
பார்வையாளன் என்னை
ஈர்க்கும் அவற்றின் வீரிய விசையை
அவ்வளவாகச் சொல்ல முடிவதில்லை..
தன்னிச்சையாக உடைபடும் நீர்க்குமிழ்களின்
கருமையானதோர் சாரலில்
என் காகிதக் கற்பனைகள் எரிய ஆரம்பிக்க
விடத்தின் ஓரிரண்டு துளி மை..
எல்லையற்றத் தனிமை இடறி
பாதங்கள் நின்று விட
வாலறுந்த வார்த்தைகள் இன்னும்
உயர பறந்து கொண்டிருக்கின்றன..
- தேனு
நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4996