Sunday, November 25, 2012

தன்னிலை மறந்த பொம்மையின் பயணம்


ஒவ்வொரு உலகமாகச் சென்று
தனக்கான மௌனக்கதையைச்
சொல்லிச் செல்கிறது பொம்மை..
.
முதல் உலகில் குழந்தை ஒன்று
நகைத்தபடி
பொம்மையை அணைத்து ரசிக்கிறது..
.
இரண்டாமதில் இருவண்ண பட்டாம்பூச்சிகளை
விழிமுழுதும் நிறைத்த சிறுமி
பொம்மையிடம் சிறகுகளைக்
கதைத்து பறக்கிறாள்...
.
மூன்றாமதில் கைப்புத்தகங்களை
அறைமுழுதும் நிரப்பிய பெண்
ரகசியங்களை
பொம்மையிடம் அரங்கேற்றுகிறாள்..
.
நான்காம் உலகில் வசித்துவந்த
உதிரம் சுவைக்கும் கழுகிடம்
சிலாகித்துத் நிகழுலகிற்கு
உணர்வற்றுத் திரும்பும்
கைகால் முறிபட்ட பொம்மை,
ஐந்தாம் உலகின் சுவர்களில்
வண்ணங்கள் இழந்து கிழிக்கப்பட்ட
ஒரு புகைப்படத்தில் சென்று
அமர்ந்து கொள்கிறது...

- தேனு 

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5918

மெள்ள மீள்வடிவம் பெறும் மௌனம்

கனவுகளின் நீர்மம் கெட்டிபடத் துவங்கும் நிகழ்வுகளில்
வண்ணமற்றச் சிறகுகளுடன் 
சில எழுத்துக்கள்
மொய்த்துக் கொண்டிருக்கின்றன..
.
மௌனமென்ற ஒற்றை இடத்தைப்
பூரணமாக்கும் எந்தவொரு எழுத்தையும்
இக்கணம் வரைக் கண்டதாய்
துளியும் நினைவில்லை..

ஒரு முறை வீழ்ந்தால் மறுமுறை என்ற
முயற்சி திருவினையாதலும்
தோற்றுப் போகிறது
வெற்றிரவின் ஓர் ஓரத்தில் வீழும் இச்சிறகுகளுக்கு...

வீரியத்துடன் வெளிவரும் புன்னகையில்
புறந்தள்ளுதல்
அவ்வளவு எளிதாயில்லை
என்கிறது வள்ளுவன் எழுதிச் சென்ற இன்சொல்..

ஈடிணையற்ற மௌனத்தை
நொசிவிழைக்கயிறால் தொடுக்க முயல்கின்ற
எழுத்துக்கள்
ஒரு மெல்லிய ஒளியின் விளிம்பில்
துவண்டு நிற்க,
வண்ணங்களற்ற சிறகுகளை
கனவுகளின் நீர்மத்தைத் துடைத்தெடுத்து
நீர்வண்ண இறகுகளால்
மெள்ள நிறைகிறது எழுத்துக்களாலான சிறகுவனம்..


 - தேனு 

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5918

Saturday, November 3, 2012

தீரா வண்ணத்தில் ஒரு மலரின் உருவம்


chess-homepage
சுளீர் சுளீர் என இரைந்து கொண்டிருந்த
அறையின் மையத்தைச்
சுற்றிலும் நீண்டிருந்த கட்டங்கள்…
அழகானதொரு விளித்தலில்
பூதாகரமாய் துவங்குகிறது
களமறியாதோர் ஆட்டம்…
நகர்தலென்பது ஒரு அடியே எனினும்
தன்னைச் சுற்றிலும்
அரணமைத்துக் காத்திருக்கும்
உருவ பொம்மைகளின் வீழ்ச்சியிலும்
நிறையவில்லை
ஊன விழிகளால் காணத்தகும் இருள்.
உணர்ச்சி மிகுதலில்
காய்கள் வெள்ளையாயும் கருப்பாயும்
எதிரிலிருக்க சில்லு சில்லாய்
வெட்டி வீழ்த்தி நகர்கிறாள்
சதுரங்க விதிகளை
அடுத்தடுத்து உடைத்து.
கட்டங்களின் நிறம் அழிந்து
வாழ்க்கைச்சதுரங்கம் கனக்க,
சிகப்பு சாயத்தில் குளித்து
கருப்புமல்லாது வெள்ளையுமல்லாது
தனித்து நிற்கிறாள்
சதுரங்க ராணி.
 - தேனு 
நன்றி சொல்வனம்,