Sunday, June 17, 2012

மழை உரையாடல்களுக்குப் பிறகான சலனத்துளிகள்



*
மழை ஓய்ந்த இரவினில் ஒற்றை சலனம்
வெகு இயல்பாய் கீழிறங்கி விடுகிறது...

நேற்று பெய்யாமலும்
இன்று பெய்தும் போன உரையாடல்களுடன்
மெலிதாய் நீளுகின்றன
நாளை பெய்வதற்குண்டான சாத்தியங்கள்..

பயணிக்க மறந்ததான உணர்வுச் செதில்கள்
உராய்ந்து செல்லும் அடர்நிமிடத்தில்
மௌனமாய் படர்ந்த தளமென
உறைந்து விடுகின்றன எண்ணங்கள்...
தளர்வைக் குறிப்பிட்டெழுதும் பொழுதுகளில்
ஒற்றை நிலையில்லா நினைவுகளுக்கான
கீழ் நோக்கிய பயணம்
தாழ்வீர்ப்பு விசை தந்திரம் என்பதில்
இழுபட்டு நீர்க்கிறது சலனம்..

மழைக்கு பிறகான தளிரிலையின் விளிம்பு
வெகு இயல்பாய் ஒற்றை சலனத்தை
கீழிறக்கி விடுகிறது...

- தேனு,

நன்றி உயிரோசை,

No comments:

Post a Comment