Monday, January 31, 2011

புளித்துப் போகிறது நாற்றம்




சவக்கிடங்கில் மெல்லியதோர்
புகைச்சல்
எட்டிப் பார்க்க ஏனோ
துருதுருக்கும் நெஞ்சம்
யாதாய் இருக்கும்
புது உருப்படி?

தூண்டிலிட கிட்டியது
விடை..
ஒன்றல்ல இரண்டாம்!!!

வெந்த புண்
கருகிய உடல்
தலைவனுக்காக தீக்குளிப்பு
தொண்டனது ஒன்று!!!

தோல்வி கண்ட காதல்
வெற்றி கண்ட மரணம்
உண்மைக்காதலனது ஒன்று!!!

அருமை அறியா
கிறுக்கர்கள்!!

துளியும் நெருடலில்லை
நாசிதனில்,
ஆமாம்!!
ஆணித்தரமான செதுக்கல்
சவமணமும் மனப்பழக்கம்!!!

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311013028&format=html

No comments:

Post a Comment