Saturday, January 8, 2011

கைம்பெண்

உடலெங்கும் மோகத்தீ
உச்சிவரை சூடேற்ற
பாழாய் போன உயிர்
சுகந்தேடி அலைகிறது
.
மனமெல்லாம் ரணமாய்
கொல்லைக்கு விரைந்தேன்
கிணற்றடியில் கிடக்கும்
இருகுடம் தண்ணீர்
முழுதாய் முடியாவிடினும்
சற்றாவது தணிக்கட்டும்
.
உற்றவனை இழந்ததால்
உணர்வற்ற ஜடமாகவே
மாறிடச் சொல்லிச்
சாடுகிறது சுற்றம்

No comments:

Post a Comment