Saturday, January 8, 2011

இருள்சூழ் அழகு

அந்தி வேளை அண்டமெலாம் அமைதி
எங்கோ இரு குட்டை வால் குருவி
எங்கே என்துணையென இரைய
அங்கொரு அருவி வீழ்ந்தெழும்
அடங்கா ஓசை
இங்கே கருங்குழல் விரித்து
செந்தூரம் நெற்றியிலே
மூன்றாம் பிறையாய் அழிந்து
மல்லிகை மணமோ எங்கெங்கும் பரவி
என்னவள் என் மார்பில்
முகம் புதைத்து உறங்கும் இவ்வேளை
நீளச் சொல்லி வேண்டுது
நித்தம் வேண்டுமென்று ஏங்குது
உணர்ந்தெழுந்த பேராசை மனமெனது!!!

No comments:

Post a Comment