Saturday, January 8, 2011

தரையிறங்கிய நிலவு


அகிலமே இருண்டிருந்த
அந்திமாலை வேளையது
விட்டத்தைக் கண்டவாறே
விழுந்திருந்தேன் கட்டிலிலே
ஒளிவிளக்கு கைகளில்
ஏந்திவந்த பெண்ணழகு
உடன்வியந்து எழுந்தேனே
இளமஞ்சள் ஒளியினாலே
அழகுபொன் முகமது
அந்திநேர ஆதவனோ!!
தீண்டிடவே முற்பட
தலைகவிழ்ந்தொரு குறுநகை
வெண்ணிற ஆடையில்
வெட்கித்தான் சிவந்தாளோ
உரையாதோ!! நீளாதோ!!
உணர்த்திட்ட மின்னணைப்பு...

No comments:

Post a Comment