Saturday, January 8, 2011

சுகமான நினைவலைகள்

மழை சாரலினூடே
மிதமான சூட்டோடு
தேனீர் பருகி
தோழரோடு அடித்ததோர் அரட்டை!!!

பள்ளி பேருந்தினில்
தள்ளி நின்றாலும்
பார்க்கும் போதெல்லாம்
விழிகளில் குறும்புடனே அவளுதிர்த்த குறுநகை!!!!

நீண்ட தொடர்பாதையில்
நண்பன் தோள்பற்றி
காதல் கதைகளின்
கிசுகிசுக்களை அலசியொரு ஆராய்ச்சி!!!

தென்றல் தீண்டுமோர்
தெளிந்த மாலைபொழுதினில்
நெருங்கி வந்து
நேரம் கேட்ட அப்பெண்ணின் அழகு!!!

நான்காமாண்டு கல்லூரியிலே
நல்லதோர் வேலைகிட்ட
நம்பா வண்ணம்
நண்பர்களைத் தழுவிக் கொண்ட ஆட்டம்!!!

மென்பொருள் பொறியாளனுக்கு
பழையதுகளை அசைபோடுவதுதான்
எத்தனை சுகம்!!!

1 comment:

  1. மழை சாரலினூடே
    மிதமான சூட்டோடு
    தேனீர் பருகி
    தோழரோடு அடித்ததோர் அரட்டை!!!
    சொல்ல வார்த்தை இல்லை...:-)

    ReplyDelete