Saturday, January 8, 2011

ஈனஸ்வரம்

கடக்கும் பாதையில்
நித்தம் ஒரு நெருடல்...

பக்கத்து இருக்கையில்
நடுத்தரவயது பெண்மணி
.
ஈரமான விழிகளுடன்!!

பேருந்து நிறுத்தத்தில்
ஒவ்வொருவராய் கைபிடித்து உலுக்கும்
.
காசுக்காக பச்சிளம்பிஞ்சு!

குரைத்துக் கொண்டே பின்வந்து
வாரியெடுக்கவா கோரிக்கை?
.
தெருவோர நாய்க்குட்டி!

சொகுசான மாடி வீட்டினுள்ளும்
எட்டி பார்க்கத்தான் செய்கிறது!!
.
மெல்லியதொரு விசும்பல்!

வீசி எறியப்பட்ட
மல்லிகை மலர்கள் அனைத்தும்
காய்ந்து உலர்ந்தவை தானா??


நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12291:2011-01-08-07-15-49&catid=2:poems&Itemid=265

No comments:

Post a Comment