Tuesday, January 11, 2011

அன்புடன் சிநேகிதிக்கு




சந்தித்தோம்
என்று? எங்கு? எப்படி?
சரிவர நினைவிலில்லை எனக்கு!!!
 .
ஓரிரு வார்த்தைகள்
நாட்கள் நகர
மணிகணக்கு உரையாடல்களாயின
 .
தடம்தேடி நிற்கையிலே
தோள் தந்தாய் நீ
இளைப்பாறினேன் நான்
கைகோர்த்து பயணித்தோம்!!!
 .
காதலியா?
பலரது அர்த்தமற்ற வினாக்களுக்கு
விடையுரைக்க
பேசாதிருந்த சில வருடம்
அனல்கக்கிய போர்க்காலம்!!!
என்றும் நெஞ்சமதில் வடுவாய்!!!!
 .
என் கவிதைகளைப் பற்றி
எவரிடமும் சிலாகிக்க
சற்று தயக்கம் எனக்கு,
 .
உன்னிடம் மட்டும் சிலாகிப்பதேன்?
யோசிக்க வைக்கும் கேள்விதான்!
இன்றும் விடை தேடி நான்..
 .
எனக்கு வாய்ப்பவள்
எப்படி எடுத்துக் கொள்வாள்?
.
உனக்கு வாய்ப்பவன்
உணர்ந்து அனுமதிப்பானா?
.
இரு கேள்விகளுடன்
தொடர்கிறது வார்த்தைகளுடனான
நமது மௌனப் போராட்டம்!
.
வாய்ப்பவர்கள் எப்படி இருப்பினும்
தொடரவே விழைகிறது
நெடுந்தூர நட்பு பயணம்
ஆழமான நினைவுகளுடன்!!!!
நன்றி இளமைவிகடன்
http://new.vikatan.com/article.php?aid=2572&sid=78&mid=10

1 comment:

  1. வாய்ப்பவர்கள் எப்படி இருப்பினும்
    தொடரவே விழைகிறது
    நெடுந்தூர நட்பு பயணம்
    ஆழமான நினைவுகளுடன்!!!!
    தேன்....மிகவும் அற்புதம்....:-)

    ReplyDelete