Sunday, January 23, 2011

நெருஞ்சி முள் தைக்கிறது


இருள் கிழிபடுமா?

குளிர் நிலவோடு
தொடர்கிறது அவள் பயணம்!
நெருடல் மனதினுள்!!
.
அழகுற்றதா? அழகற்றதா?
அவன்களுக்கு அவளிட்ட
காந்தக் கூற்று!
அவனது கட்டாயத்தின் கீழ்!
.
வேறுபாடு வேறுளதோ?
கருத்து யுத்தமா?
துளியும் இடமில்லை இங்கே!!!
.
அழகாக நடந்தேறியது
அனிச்சையாய் கலப்படம்
எதனோடு எது?

கூடல் பின் கூடலாக
குற்றத்தின் அடிகோல்!
எங்கோ ஒரு குட்டைக்குள்
குழப்பம் தேடி!!!

அந்தோ பரிதாபம்!!
சற்றும் அரவமின்றி
நகைத்துக் கொண்டிருந்தது
அவளது நிழல்!!!

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31101172&format=html

No comments:

Post a Comment