Saturday, January 29, 2011

நிதர்சனம்




இரவைக் கிழித்து
எழுகையிலே
கிழிபடத் தொடங்கிற்று
நாளேடு!!!

இன்றென்ன புதியது?
வேறென்ன புகுவது?
வகை வகையாய் எண்ணம்
அசை போட்டபடி நெஞ்சம்!

ஆள் பாதி
ஆடையும் பாதியாய்
பார்த்துச் சிரித்தது,
பிரதிபிம்பம்!!

ஆயிரம் ஆயிரம்
கனாக்களும் ஏக்கங்களும்
தோள் பற்றி
நாள் முழுதும்!!

எந்திரமாய் ஓடித்திரும்புகையில்
இருள் சூழ்ந்திருந்தது!!
கதை, கவிதை, புத்தகம்
மூவிரண்டு அலசல்கள்
எதிலும் வாய்த்திடாது
அயர்ந்துறங்கிப் போயின
விழிகள் அன்றும்!!

மீண்டெழுந்தால்
நாளையும் கிழிபடும்
நாளேடில் ஓர் தாள்!!!
...

நன்றி கூடல்

No comments:

Post a Comment