Tuesday, March 22, 2011

கருநிற பிரதிவாதிகள்


ஒவ்வொருவரின் கீழும்
ஊர்ந்து வருகிறது
ஓர் கரிய உருவம்..
.

செய்வதையே மீண்டும்,
மீண்டும் வந்து செய்தும்
மெலிதாகக் கசிந்து
நடப்புகளுக்கு ஏற்றாற்போல்
அடலாய் விரிவடையும்...
.
நடந்தேறும் எந்தவொரு
பிழையினிற்கும் அதற்கும்
இருப்பில் உள்ள உறுதிப்பத்திரம்
சில நேரங்களில் இயலாமை
காரணமாகவும்
இறுகச் செய்யப்படலாம்...
.
காலங்கள் நகர நகர
அவைகளின் விரிவாக்கம்
சற்றே அச்சுறுத்தும்...
.
அவற்றுக்கான
இரகசியங்கள் ஓர் வேற்றுலகில்
காக்கப்பட்டு
ஆர்ப்பரிப்புகள் ஓங்கியெழும்
கணத்தினில்
ஒவ்வொன்றாக கைகோர்த்து
இருள் கப்பி வானளாவும்
பிம்பமென உருவெடுக்கக் கூடும்...
.
அதற்குக் கீழேயும்
ஊசலாடியவாறு நிற்கும்
கரியதாய் ஓர் பிரதி..

 - தேனு

நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13715:2011-03-21-14-18-19&catid=2:poems&Itemid=265

No comments:

Post a Comment