Tuesday, March 1, 2011

உரிமையின்மை தொடக்கம்


இருள்சூழ் வீடு
சுருண்டு கிடந்தன
அகமும் புறமும்!

அன்னையா?
வளர்க்கத் தெரியுமா?
வளர்த்தால் போதுமா?
வினாக்கள் வலுத்து
மருகி சீற்றம்..

வசையினது விசை
சற்று ஆழமாக...
கருகும் மலர்கள்
துடிப்பு தொடர்ந்தது!!

அன்று
பிடியாது கூட்டுடனே
பயணிக்க எத்தனித்தேன்
.
இன்றோ
அத்தொடர்பயணம்
தடங்களுடன் தயக்கம்..

சுரக்க மறுத்ததில்லை
அதரங்கள் துடிக்கின்றன
மெய்யுரைக்க,
சுரக்கவே இல்லை!!!

என்றுமன்றி இன்று
கால் சலங்கை
கனலாக உறுத்தியது

 - தேனு

நன்றி வார்ப்பு,
http://www.vaarppu.com/view/2392/

2 comments:

  1. அருமை தேனு கவிதை.. தொடரட்டும்..

    ReplyDelete
  2. நன்றி தேனம்மை Ma'am :)

    ReplyDelete