Monday, March 14, 2011

நீ, நான் மற்றும் அவன்


ஆழிகள் கண்டறியா
அமிழ்ந்திருக்கும் தெப்பமென
நனைகூந்தல்...
அந்தவொரு கணத்தில்
சுற்றம் அனைத்தையும் தவிர்த்து
முன்னிலையில் நிறுத்தப்பட்டிருந்தன
காதலும் காமமும்...
.
இன்னதென்று பிரித்தறியாதபடி
படர்ந்து விட்டிருந்த யாக்கைகள்
சீராய்ப் பாடும் தென்றலுக்கு
சற்றே ஊடுருவும் சலிப்பை
வாரி வாரி வழங்கி,
உராய்தலுக்கான வீரியத்தில்...

உச்சி நுகர்ந்திடும்
அந்த எச்சில் ஈரம்
காய்ந்திட்டதாய் துளியும்
விட்டுவைக்கவில்லை நினைவுகள்..
.
உயிரணுக்கள் உயிர்த்தெழும்
அந்நொடிப்பொழுதிலும்
இதிகாசங்கள் நவில்ந்திட்டு
செருக்குடன் தள்ளி நிற்கிறான்
கவிதையெனும் மூன்றாமவன்!!


 - தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31103137&format=html

No comments:

Post a Comment