Thursday, March 3, 2011

பின்னிரவு சாயங்கள்...



வெண்ணிறத் திரை
மெலிதாக ஊடுருவப்பட்டு
சாளர கட்டங்கள் வழி
இரவுக்கீற்றுகளிடும்
சலனமற்ற நர்த்தனம்..

.
நிதம் என் உறக்கங்கள்
என்னுடையதாக இருப்பதில்லை..
என்னைத் தழுவியும் இருக்கவில்லை..

.
பின்னிரவு மீதான
நிதர்சன சந்தேகங்கள்..
என்னை அயர்த்தி
என்னவளுக்கும் பின்னிரவுக்குமான
நடப்புகள் பற்றி..

.
தன்மான மயிர்
உந்தித் தள்ள
விழிகள் சிவந்தும்
தொடர்கிறது
என் யூகத்திற்கான கண்காணிப்பு..

.
இன்றும் நடந்தேறுகிறது
அவள் அதரங்களுடனான
அழகியதோர் பிணைப்பு..
நிம்மதி நாடிகள்
துளிர்த்திட..
அது பின்னிரவுடன் அல்ல!!


 - தேனு


நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13208:2011-02-24-08-55-01&catid=2:poems&Itemid=265

2 comments: