Thursday, February 2, 2012

வண்ணமிசைக்கும் விழிச்சிறகுகள்



*
மழை வண்ணங்களை இழைத்து
தன்னுடல் முழுக்கத் தீட்டிக் கொள்ளும்
இரு மீன்குஞ்சுகள்
மௌனமாக நீந்திக் கொண்டிருக்கின்றன,
நீர்த்தழும்பும் கானல் ஒலியில்
இரவுநதி உறங்குவதாய் சொல்வதை
நம்புவதற்கில்லை...
**
வாவென்று என்னையும் உடனிழுக்க
இரவுநதி முழுதும்
நாங்கள் நாங்களாகவே
இழைந்து நிறைந்திருக்கிறோம்...

நீந்தும் மீன்குஞ்சுகளை அள்ளி
தன்னுள் படரவிட்டு
சூரியக் கூண்டின் தேடலிற்காக
கனவுச்சிறகுகளை விரல்பிடித்து
அழைத்துச் செல்கிறாள் யாழினி..
*

 - தேனு

 நன்றி உயிரோசை,

No comments:

Post a Comment