Wednesday, February 8, 2012

இருள்சிறகுகளுடன் நடனமாடும் அதிர்வலைகள்..


இரவைக் குழைத்து நிறைக்கும்
மொட்டை மாடியின்
ஒரு முனைக்கும் மறு முனைக்குமான இடைவெளியில்
நிழலாடிக் கொண்டிருக்கிறது
ஒரு உருவம்..

மனச்சாளரங்கள் தாழிட்டிருக்கும் பட்சத்தில்
அவனோ அவளோ நிகழ்த்திக்கொண்டிருக்கும்
மௌனப் பரிமாற்றம்
ஆறாம்விரல் கைபேசிக்கு மட்டுமென
மிச்சப்படுகின்றது வெளிச்சம்..

இருளின் கிளையில் அமர்ந்து
வார்த்தைகள் தேடுமெனக்கு
படர்ந்திருக்கும் இருளில்
நிலவு மட்டுமன்றி அதிர்வலைகளும்
பொழிந்து கொண்டுதானிருக்கின்றன..
   - தேனு
 
நன்றி உயிரோசை,

No comments:

Post a Comment