Monday, January 23, 2012

பெருநகர இரவின் ஓர் காகிதம்



வெறித்து நிற்கும் சாலையின்
இருபுறமும் சோடியம் விளக்குகள்
உதிர்க்கும் இளமஞ்சள் மழை....
அவை நனைக்கும்
மின்கம்பிகளின் இடையில் ஊர்ந்தேறுகின்றது
சொற்பமாய் தொக்கி நிற்கும்
கருநிற இருள்வலை..

எழுத்து சாளரங்கள் வழியே
சாலையின் தனிமையை
அலசியுதிர்த்து உட்கொள்ள இயலாமல்
உயிர்ப்பையும் இறப்பையும்
பின்னியெடுக்க ஆரம்பித்திருந்தன
கனவுகளில் அயன்றிருந்த விழிகளும் செவிகளும்..

இப்பெருநகர மௌனத்தைக்
கலைக்க மெலிந்துணரப்படும்
ஆலையின் இரைச்சல் மொழியோடு
இறப்பினை மீறிய அணுக்களின்
மௌனக்காகிதத்தில் நிறைவுற்றிருந்தது
துயிலா இரவென்று ஒன்று..

 - தேனு

நன்றி உயிரோசை,

No comments:

Post a Comment