Friday, February 10, 2012

காற்றோடு கலக்க மறுக்கும் புகைமணம்


காற்றில் பிசுபிசுக்கும்
பாசத்தின் கலவையை
முகம்முழுதும் அப்பியவாறு
புகைந்துகொண்டிருந்தவற்றை
விழிகளுக்கு நேராய் காணமுடிவதில்லை...
 
மெய்வண்ண முகங்களை
வருத்தத்தின் திரைகொண்டு மறைத்தோர்
அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகளை நோக்கி
புகையை உடல் முழுதும்
பூசிச் செல்கின்றனர்...
 
பெய்யாமல் போன மழைக்கென
புகையை மட்டுமாவது
விட்டு வைக்கும் விருப்பத்தில்
மெல்ல சிரித்துக் கொண்டிருந்தேன் நான்,
சிரிப்பின் நிறமற்ற எதிரொலியில்
எரிந்து கொண்டிருந்தது என்னுடல்..

 - தேனு

நன்றி உயிரோசை,

No comments:

Post a Comment