Monday, February 20, 2012

காகிதங்களில் சொற்பமாய் குறிக்கப்பட்ட பிரிவு


*
யாருமற்று தனிமையில் காற்று
பெருமழையென பொழிந்து கொண்டிருந்தது..

நுண்ணிய இசை நிறைந்த அறையில்
பருகிய நெடி மீதமான
நான்கைந்து தேநீர்க் கோப்பைகள்
மேசை மீது கிடத்தப்பட்டிருந்தன..

ஒரு உறவின் இணக்கம் பதிவுற்ற
காகிதங்களில்
பதிந்திருந்த எழுத்துக்களை அழித்து
பிணைப்பெனும் நிறமற்ற நீர்
வெறுமையாய் வழிந்து கொண்டிருந்தது..

தனிமையின் விளிம்பில் கிடக்கும்
வெற்றுக்காகிதங்களைக் கிழித்தெறியும்
காற்றைப் பெருமழையென
பொழிந்து கொண்டிருந்தது மின்விசிறி...
*

- தேனு

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=18344&Itemid=139

1 comment:

  1. ஒரு உறவின் இணக்கம் பதிவுற்ற
    காகிதங்களில்
    பதிந்திருந்த எழுத்துக்களை அழித்து
    பிணைப்பெனும் நிறமற்ற நீர்
    வெறுமையாய் வழிந்து கொண்டிருந்தது..

    Arumai... Wait for my new poems :)

    ReplyDelete