Friday, April 29, 2011

கூண்டிற்கருகில் கிளிகள்



விடியல் அழகில்
என்னிடம்
செய்தித்தாளினை
விழிவிரித்து கதைக்க
சுதர்சன் தாத்தா அங்கில்லை..


சில தேக்கரண்டி அன்பைக்
கலந்து
அதிசுத்தமான அய்யங்கார் காபியை
ஆற்றிக் கொடுக்க
மங்களம் பாட்டியும்தான்..


மௌனம் பேசும்
அக்குறுகிய அடுக்களையையும்
கம்பீர நாற்காலியையும்
வெறித்தபடி
அமர்ந்திருக்கிறேன் நான்..


காலையில் இருந்து
வெற்று சுவருடன்
கதைத்துக் கொண்டிருக்கிறது
வானவில் அலைவரிசை...
நேற்று மாலை
செய்தித்தாள்களின்
குண்டுவெடிப்பு
தலைப்புச் செய்தியை..


- தேனு

நன்றி உயிரோசை
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4244

1 comment: