Monday, April 25, 2011

கதைக்கும் சுவர்ப்பூச்சுகள்


அழகொழுகும் குட்டி தேவதை,
நீ நிறைத்திருக்கும்
சுண்ணாம்புச் சுவரின்
சித்திரக் கிளிகள்
இசைத்துக் கொண்டிருக்கின்றன..
.
காவலுக்கென
மின்னல் தோரணங்களை
இதய கிளைகளில்
கட்டிவிடும் யதார்த்தம்
உன்னால் மட்டுமே வாய்க்கும்..
.
மௌனமாய்
அக்கிளிகளுக்குள் நடந்தேறும்
கதை மொழிதலும்
கவிதை மொழிதலும்
இரகசியம் என்று
விரல் வைத்து இதழ் குவித்தாய்,
நினைவிருக்கிறது..
.
இரகசியங்களை அவிழ்க்காமல்
நீ தலையாட்டிப் போகையில்
மெல்லியதோர் நகைப்புடன்
இனிக்கிறது
உன் முகத்தில்
பச்சை சிறகுகள் படபடக்கும்
ஒற்றை செவ்வந்தி...


- தேனு

 நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311042414&format=html

No comments:

Post a Comment