Wednesday, April 27, 2011

காய்த்துப் போன பிஞ்சு விரல்கள்



வீடு விட்டு வீடு
விட்டுப் போன உறவுகள்
வனப்புடன் நிலைத்திருக்கின்றன
அவளது நினைவுகளில் மட்டும்..
அக்கரை விட்டு இக்கரை..

நீளும் நாட்களின் அசுத்தங்கள்
மத்தியில்
மெல்லியதோர் ஓலத்துடன்
பம்பரமாய் சுழல்வது
அவளுக்கே உரித்தான சங்கதி
என்பதில்
ஐயமேதும் இருப்பதில்லை..


இக்கரை..
காய்த்துப் போய் தேய்ந்தொழுகும்
ரேகைகளின் ஊடே
வெள்ளைநோட்டுக்களின் வாசம்..
விழிநீரில் கரைந்திட்ட
நிம்மதி முடிச்சுகள்
அனிச்சையாக கிளறப்படுதல்
அவள் குற்றமல்லவே..

அக்கரை...
அஞ்சலில் வந்துசேரும்
அந்நோட்டுக்களில்
துளி துளியாகச் சொட்டிக் கொண்டிருந்தது
சிறிதும் நெடியற்ற
அவளது வியர்வை..

 - தேனு

நன்றி இளமை விகடன்,

3 comments:

  1. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமை அருமை ...

    ரொம்பவும் அருமையா எழுதிய உங்களுக்கு நன்றிகள் ...

    ReplyDelete