Monday, April 11, 2011

சாரல்களின் மெல்லிசை



மழை பயிற்றுவிக்கும்
பேச்சுத்துளிகள்
சில யுகங்களை
கடந்திருக்கும் யதார்த்தம்
நமக்கு மட்டுமே உட்பட்டது..
.
சாரலில் மயங்கியிருந்த
உன் மடிமீது
துயில் கொள்கின்றன
சொடுக்கப்படும்
என் விரல்கள்..
.
நிலவுகளை அள்ளித் தெளிக்கும்
உன் கரங்களில்
என்னை முழுதாய்
ஏந்திக் கொள்ளும்
அழகினையும் கற்றுத்தான் வைத்திருக்கிறாய்..
.
நிதம் நமக்கான
குறிப்புகளின் வெற்றிடத்தை
நிரப்பி விடுகின்றன,
அள்ளியெடுத்துக் கதைக்கப்படும்
ஒன்றிரண்டு வண்ணக்கவிதைகள்...
.
வெட்கத்தோடு நூலிழையில்
பின்னப்படும் தென்றல்..
அது வீசும் உன் முகவரியில்
இப்படித்தான் ஒருசில சாரல்கள்
காதல் நுகர்கின்றன...

இசை மழைகிறது... மழை இசைகிறது...

- தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311041010&format=html

3 comments:

  1. வெட்கத்தோடு நூலிழையில்
    பின்னப்படும் தென்றல்..
    அது வீசும் உன் முகவரியில்
    இப்படித்தான் ஒருசில சாரல்கள்
    காதல் நுகர்கின்றன...


    ...So sweet! :-)

    ReplyDelete
  2. நன்றி சித்ரா Madam..
    நன்றி ரமேஷ்..

    ReplyDelete