Monday, December 3, 2012

வெளியாகும் விடத்தின் ஒரு துளி




விடத்தினை ஒத்திருக்கும் பானத்தின் ஒரு துளி
நீண்டதொரு சுவாசக் கோப்பையில்
மெள்ள பயணிக்கிறது..
.
பயணத்தின் ஒவ்வொரு அடியிலும்
உயிர்ப்பின் மீள்சிறகுகளை
யதார்த்தமாய் பொசுக்கிக் கொண்டு
வெறுப்பின் உமிழ்நீரால்
இலகுவாய் வாசல் திறந்து கீழிறங்குகிறது...
.
வேதிவினை விளைவுகளால்
மாற்றத்தை உருவாக்கி
வீழ்அணுக்களை உயிர்ப்பிக்க எண்ணி
ஏமாற்றநீர்மையில் நழுவுகின்றன
துளிரன்பின் தீத்துகள்கள்..
.
உயிர்ப்பின் மையத்துளியை
நோக்கிப் பயணித்த
வார்த்தைபாணத்தின் விடத்தால்
மெள்ள மெள்ள 
நிறைகிறது சுவாசப்பை...

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6110

No comments:

Post a Comment