Saturday, December 22, 2012

பூவண்ண மழையின் ஓர் இதழ்





சாரல் தீண்டும் மௌனஇரவின்
மழைத்துளி ஒவ்வொன்றையும் விரல்களில் ஏந்தி
தன்னுயிர் சுவாசத்தால்
வண்ணத்துப்பூச்சியென மாற்றி
நட்சத்திரப் பூவனத்தில்
விடுத்துக் கொண்டிருந்தாள் யாழினி..

சிறகடித்துப் பறக்கும் ஒவ்வோர் துளிக்கும்
ஒரு வண்ணக்கவிதை கணக்கென
வண்ணத்துப்பூச்சி உடலெங்கும்
தன் கன்னங்களின் நிறம் குழைத்து
வரைந்து கொண்டிருந்தாள்..

அவளை வண்ண வண்ணமாய் ரசித்துக்
கண்சிமிட்டியபடி சிலிர்த்திட்டு பறந்திருந்தது
பூவண்ண மழையிரவு...


 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5271

No comments:

Post a Comment