Tuesday, December 11, 2012

நிலவதனி என்றொரு அரசி






உடலெங்கும் உயிர்ப்புகளை
செருகிக் கொண்டு நடக்கிறாள் நிலவதனி,
அவளது விழிகளின் ஓரத்தில் அமர்ந்திருக்கும்
மின்மினிகள் அரவமற்று சிரிக்க,
காற்றலைகளின் போக்கில்
ஒரு செவ்வண்ண வனத்தை
அடைகிறாள்..
வனத்தைக் கிழித்து பாயும் நிறமற்ற நதியை
ஒரு மீன்குடுவையில் நிரப்பி
திருப்தியுடன் திரும்புமவள்
வழியில் ஈர்க்கும் விட்டில்களையும்
ரீங்காரமிடும் சில்வண்டுகளையும் அணைத்து
வேகமாகத் தன் வனத்தை அடைந்து மரிக்கிறாள்.
மரித்தவள் கைகளில் இருந்து
மெல்ல குடுவை நழுவி
நதி உருளகரைகளில்
மெள்ள மெள்ள
நிலவதனி மலர்கள் பூக்கத் துவங்குகின்றன..

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6123

No comments:

Post a Comment