Monday, December 17, 2012

உலர்த்தப்படும் பழுப்புகளின் நிறம்


ஒரு வகையான உரையாடலுக்குப் பிறகு
உடைகள் முழுதும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நிரம்பியிருகின்றன,
பழுப்பு நிற திட்டுகள்..

காலநீர்மை உடைகளின் மையத்தில் 
ஒரு அன்பின் இயற்பியலையோ 
ஒரு இறுக்கத்தின்  வேதியலையோ
வலிந்தளிக்கும் பட்சத்தில்
திட்டுகள் இலகுவாய்
நிறம் மாறத் துவங்கியிருந்தன..

சொற்களின் உணர்வு வீரியத்தில்
பழுப்புகளை இழுத்துப் பிழிந்து
யதார்த்தக்கம்பங்களின்
ஒரு பிடிக்கும்
மறு பிடிக்குமான
தொலைவில் பிழியப்பட்டு உலர்கின்றன..

உலர்த்திய உடையின் நுனிகளில்
சொட்டு சொட்டாய் வழிந்து கொண்டிருந்தது
நிறமற்று வெறுப்பு நீர்..

- தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6123

No comments:

Post a Comment