Monday, February 14, 2011

காதல் பிணைப்பினிலே



நீர்ம திரையின் மறுபக்கம்
வெட்கம் மீதான சேர்க்கையுடன்
ஏறத்தாழ அவளது முழுமுகமும்..


வழிந்தோடும் விருப்புகள் வழி
இழையோடி நின்று
அவ்விமைகளிடும் தாளங்கள்..
என்னவென்று யூகிக்க
நேரமிட்டு வைப்பதன்றி
விரல்கள் ஒவ்வொன்றாய்
விடுபட..


இடறி சிதறுண்ட
விண்மீன்கள் சில
சட்டென அவள் முகத்தில்
ஒருசேர குடிகொண்டன
நாணத்துடன்..


என்னையும் மீறி
ஏதோ ஓர் புள்ளிக்குள்
காதலித்து நான் கிடக்க
முகமூடியைக் களைத்தெறிந்து
படர்ந்து கொண்டாள்..
சற்று மயக்க நிலையில்
இறுக பிணையப்பட்டு நான்..


சாரலென உள்ளூர சிலிர்க்க விட்டு
நகைத்தபடி நின்றிருந்தன,
அவளுக்கென்று நான்
மீதமாக்கி வைத்திருந்த
ரசனைகள்...


நன்றி காட்சி
http://kaattchi.blogspot.com/2011/02/blog-post_14.html#more

நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12966%3A2011-02-13-11-32-15&catid=2%3Apoems&Itemid=265

"கீற்று" தளத்தில் தலைப்பு - அம்மாலைப் பொழுதினிலே.. I thought that it got rejected in Keetru, so sent it to Kaatchi.. but got published in both the sites..

No comments:

Post a Comment