Friday, February 11, 2011

என்னவள் அழைத்திருந்தாள்...



நள்ளிரவில் சிணுங்கியது
தலையணையின் கீழ் கைபேசி!!

என்னவள்தான் அழைப்பில்...
ஒரு வார்த்தை உதிர
கனிரசம் வழிய
'காதலிக்கிறேன்'
எவ்விடமும்
ஒவ்வொரு முறையும்!

'ஒரு கவிதை சொல்லேன்'
ஓர் செல்ல சிணுங்கல்
'நீ' என்கிறேன்!!!
'ச்சீ' மீண்டும் சிணுங்கல்!
இரவின் இருளோடு
நீண்ட உரை
கைபேசிகளுக்கே வெளிச்சம்!!!

முடித்த மறுநிமிடமே
அவளோடு கூடி
என்னை ஒதுக்கியிருந்தான்
நித்திரை சண்டாளன்!!!

கோபத்துடன்
தவிர்க்கப்பட்ட தலையணையும்!!
மீதமிருந்த உறக்கங்களும்!!

நன்றி கூடல்

http://www.koodal.com/poem/tamil/kavithai.asp?id=1467&c=1&title=valentine-s-day-special-my-dear-s-call&author=thenappan

No comments:

Post a Comment