Thursday, February 3, 2011

ஒரு கவிதை உருவாகிறாள்



எண்ணச் சிதறல்
தலைவிரி கோலத்தோடு
நிர்வாண வார்த்தைகள்
.
தொடுக்கப்பட்டு
வெட்கத்தால் இழுபடுகிறது
கோர்வை!!!

சிக்கல் கலைத்து
பின்னி எடுக்கையில்
அரங்கேற்றத்திற்கு ஆயத்தம்
எந்தன் கவிதை காதலி....
.
அதர ரேகைகள் தெறித்து
ஒரு வசீகரப் புன்னகை
விடுபட
நிசப்தத்துடன் விடுதலை....
இருட்டறையில் அடைபட்டிருந்த
கற்பனை கருக்கள்!!



நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311013013&format=html

No comments:

Post a Comment