Friday, January 24, 2014

படியும் வெயிலின் நெடி


Photo Courtesy - Ashok Saravanan

*
நாளின் துவக்க நிகழ்வொன்றின் ஆழத்திற்கு
சாளரத்தின் விரல் பிடித்து
இறங்கிக் கொண்டிருகிறேன்.
சன்னமாய் பேசிக் கொண்டிருந்தோம்
வெயிலும் நிழலும், நீயும் நானும்...

வெயில் நீளும் தர்க்கத்தின்
இரு குரலற்று ஒர்குரலாய் மாறிப்போன தருணத்தில்
உயிர் பெற்று விட்டது வெயில்கீற்று..
*
முற்றுப்புள்ளியற்றதான ஒருகோண உரையாடலுக்கு
நிழலாய் தலை திருப்பிக் கொள்கிறேன்,
சாளரத்தின் வழி விழிகளை வெளிக்குச் செலுத்த..

நீ பின்னிருந்து விடுத்த வசைச்சொற்கள் மட்டும்
வெயில் கலந்து திட்டு திட்டாய் படிகிறது
சாளரக் கம்பிகளில்..

 - தேனு

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=26035:2014-01-23-13-10-35&catid=2:poems&Itemid=265

1 comment:

  1. திட்டு திட்டாய் படிந்த ரசனையை ரசித்தேன்...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete