Sunday, January 19, 2014

கிறுக்கலின் நீரொளி

*

இரவுக்கும் வெளிக்குமான
ஒரு மெல்லிய இடைவெளியில்
நிரம்பி விடுகிறது இட ஒதுக்கீட்டிற்கான விகிதம்..

மீள்கனவினுக்கு இழுத்துச் செல்லும்
ஒற்றையடி ப் பாதையில் நான்,
நாங்களாகவே நிறைத்திருக்க,
ஓர் ஒளியாண்டின் தொலைவை
சுலபமாய் கடந்தடைய
சுடர் அரங்கேற்றத்தின் வழிகாட்டுதலில்
நகர்கிறோம் வெகுவேகமாய்..
பெண்ணொளியோ ஆணொளியோ
ஏதும் வேற்றுமையறியாதோர்
உலகத்தின் விளிம்பில்
விதைகளுடன் சுடர்கிறோம்
அழகான தீபங்களின் ஒளியாய்
ஒளி ஒளியாய்...
வெளிச்சமாய் நிரம்பி வழிகிறது,
காகிதத்தின் மையிருள் பிரதிபலிக்கும்
ஓர் ஒளி விளக்கின் கிறுக்கலில்..

 - தேனு

நன்றி உயிரோசை,
http://uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=6134

No comments:

Post a Comment