Saturday, November 3, 2012

தீரா வண்ணத்தில் ஒரு மலரின் உருவம்


chess-homepage
சுளீர் சுளீர் என இரைந்து கொண்டிருந்த
அறையின் மையத்தைச்
சுற்றிலும் நீண்டிருந்த கட்டங்கள்…
அழகானதொரு விளித்தலில்
பூதாகரமாய் துவங்குகிறது
களமறியாதோர் ஆட்டம்…
நகர்தலென்பது ஒரு அடியே எனினும்
தன்னைச் சுற்றிலும்
அரணமைத்துக் காத்திருக்கும்
உருவ பொம்மைகளின் வீழ்ச்சியிலும்
நிறையவில்லை
ஊன விழிகளால் காணத்தகும் இருள்.
உணர்ச்சி மிகுதலில்
காய்கள் வெள்ளையாயும் கருப்பாயும்
எதிரிலிருக்க சில்லு சில்லாய்
வெட்டி வீழ்த்தி நகர்கிறாள்
சதுரங்க விதிகளை
அடுத்தடுத்து உடைத்து.
கட்டங்களின் நிறம் அழிந்து
வாழ்க்கைச்சதுரங்கம் கனக்க,
சிகப்பு சாயத்தில் குளித்து
கருப்புமல்லாது வெள்ளையுமல்லாது
தனித்து நிற்கிறாள்
சதுரங்க ராணி.
 - தேனு 
நன்றி சொல்வனம்,

No comments:

Post a Comment