Friday, August 10, 2012

இருமொழிப் பறவைகள் நிறைந்த அறை..


**

வெயில் துளிகளைப் பருகிக் கொண்டிருந்த
இரு பறவைகளை
கூண்டுடன் சிலாகிப்பவளுக்காக
வீட்டிற்கு அழைத்து வந்திருந்தேன்...
தன் சிறகுக் கதைகளை முழுதும்
கேட்டுக் கொண்டிருந்த கூண்டைவிற்று
பறவைகளுடன் மௌனங்களை
உச்சரிக்கத் துவங்கினாள்..
*
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துளியென
அறையெங்கும் மௌனங்களை மட்டுமே
பறவைகளுக்குப் பருகக் கொடுத்தாள்..
காற்றை புறக்கணிக்கும் குடுவைக்குள்
படுத்தவளைக் கண்ட
இரு பறவைகளும் காலத்தைக் கடந்து
சிறகடிக்கத் துவங்கின...
அவைகளுக்கான அவள் மௌன வனமெங்கும்
வண்ணமிசைச் சிறகுகளை நிரப்பி
ஒன்று ஒளிவண்ணத்திலும்
மற்றுமொன்று ஒலிவண்ணத்திலும்
சிறகடித்துப் பறந்திருந்தன...
**

- தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5727

No comments:

Post a Comment