Thursday, January 12, 2012

குறிப்பற்ற காகிதங்களின் மௌனம்




நகரத்தின் நறுமணத்தை உருக்கிப்
புதிராய் விழித்திருக்கும்
மூன்று உயிர்ப்புகளின் நகர்வை
உரசிச் செல்கிறது ஒற்றை நிற நள்ளிரவு..

இரவுத்துரு படியாதிருக்க
விண்மீன்திரை இடப்பட்டிருக்கும்
ஓர் இருளடைந்த அறையின் கூர்ம மூலையில்
நடந்தேறிக் கொண்டிருக்கின்றது ஓர் களவு..

சாளரங்களினூடே மெலிதாய் இறங்கும்
தனிமைக்கரங்களில் தவழும்
என் ஆழ்மனதின் வார்த்தைத்தவம்
கலைக்கப்படுவதாய் இல்லை...

இன்னும் விழித்திருக்கிறோம்
நான், காகித மௌனம் மற்றும்
வார்த்தைக்களவின் ஓர் கைப்பிடி கருஞ்சாயம்...

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5078

No comments:

Post a Comment